போபால், ஆக. 28-
மத்தியப் பிரதேசத்தில், கடந்த ஜூலை மாதம், பாஜக இளைஞர் அணி நிர்வாகி யான பிரவேஷ் சுக்லா என்பவர், பழங்குடி யின தொழிலாளி மீது சிறுநீர் கழித்த அரா ஜகம் பெரும் அதிர்ச்சியையும், கொந்த ளிப்பையும் ஏற்படுத்தியது.
இந்த அதிர்ச்சி நீங்குவதற்கு உள்ளா கவே, சிங்ராவ்லி தொகுதி பாஜக எம்எல்ஏ வின் ராம் லல்லு வைஷ்யா என்பவரின் மகன் விவேகானந்த், பழங்குடி இளை ஞரான கைர்வார் என்பவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இவ்வாறு பாஜக ஆளும் மத்தியப் பிர தேசத்தில், தலித்துக்கள் மற்றும் பழங்குடி யினருக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர் நிகழ்வுகளாக மாறி விட்டன.
இந்நிலையில்தான், தலித் இளை ஞரை அடித்துக் கொன்றும், அவரது தாயாரை நிர்வாணப்படுத்தியும் சாதிவெறி யர்கள் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம், சாகர் மாவட்டம் பரோடியா நானார்கிர் கிரா மத்தை சேர்ந்தவர் விக்ரம் சிங் தாக்கூர் (28). இவர் அந்த பகுதியில் வசித்து வரும் தலித் இளம்பெண்ணை கடந்த 2019-ஆம் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கினார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகா ரின்பேரில் விக்ரம் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதன்பிறகு ஜாமீனில் வந்த விக்ரம் சிங் தாக்கூர், பாதிக்கப்பட்ட தலித் குடும்பத் தினரிடம் சென்று தன்மீதான வழக்கை வாபஸ் பெறுமாறு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
அதன்படியே சம்பவத்தன்றும் விக்ரம் சிங், தனது குடும்பத்தினர் சிலருடன் தலித் குடும்பம் வசிக்கும் வீட்டிற்குச் சென்று வழக்கை திரும்பப் பெறுமாறு மிரட்டி, இளம்பெண்ணின் சகோதரரான நிதின் அகிர்வாரைக் கொடூரமாகத் தாக்கியுள்ள னர். நிதினின் தாயார் தடுக்க வந்த நிலை யில், அவரை ஆடைகளை களைந்து நிர்வா ணப்படுத்தியுள்ளனர். நிதினின் சகோதரி, சாதிவெறியர்களிடமிருந்து தப்பி காட்டுக்குள் ஓடி உயிர் தப்பியுள்ளார்.
படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த தலித் இளைஞர் நிதினை மீட்டு மருத்து வமனைக்கு கொண்டுசென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நிதின் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரி வித்துள்ளனர். நிதினின் தாயார் மருத்துவ மனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரு கிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் விக்ரம் சிங் தாக்கூர், கோமல் சிங் தாக்கூர், ஆசாத் சிங் தாக்கூர் உள்பட 9 பேர் மீது கொலை, பாலியல் தொல்லை, எஸ்.சி.-எஸ்.டி. வன் கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இதுரை 8 பேர்களைக் கைது செய்துள்ளனர்.